கார் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ராமசாமி, அழகம்மாள், மணிமாறன் ஆகியோருடன் பாவாலி கிராமத்திற்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் காரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் டிரைவரான வெள்ளைச்சாமி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.