Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கஞ்சா மற்றும் மது அருந்த பணம் வேணும்”… நச்சரித்த மகன்… கத்தியால் குத்தி, கல்லால் அடித்து கொலை செய்த தந்தை..?

கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் , கல்லால் அடித்து மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி, செட்டிகுளம் தெருவில் வசித்து வருபவர் பழனி. திருத்தணி ம.பா.சி சாலையிலுள்ள மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் கோகுல். கடந்த சில மாதங்களாகவே கோகுல் கஞ்சா மற்றும் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். மதுபோதைக்கு அடிமையான கோகுல், அடிக்கடி தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை மார்க்கெட்டிலிருந்து தந்தையிடம் மகன் கோகுல் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பழனி காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து பழனி திருத்தணி காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  பின்னர் காய்கறி மார்க்கெட்டில் இருந்த கோகுலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற மகளையே தந்தை கொலை செய்த சம்பவம் திருத்தணி காய்கறி மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |