Categories
உலக செய்திகள்

“உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடூர சம்பவம்!”…. அதிரடி தீர்ப்பை வழங்கிய கனடா நீதிமன்றம்….!!

கனடா நீதிமன்றம், உக்ரைன் நாட்டில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பாதிப்படைந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் 107 மில்லியன் கனடிய டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று, ஈரான் நாட்டின் தலைநகரிலிருந்து, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பிஎஸ் 752 புறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு சென்ற இந்த விமானத்தை ஈரானின் 2 ஏவுகணைகள் தாக்கியது.

இந்த கொடூர சம்பவத்தில், விமானத்தில் பயணித்த 176 நபர்களும் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஈரான், பிற நாடுகளின் குற்றச்சாட்டை மறுத்துக்கொண்டிருந்தது. அதன் பின்பு, சில நாட்கள் கழித்து அமெரிக்க ஏவுகணை என்று தவறாக எண்ணி விமானத்தை சுட்டு விட்டதாக ஒத்துக்கொண்டது.

இத்தாக்குதலில், உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தார் ஈரான் நாட்டை எதிர்த்து கனடாவில் உள்ள ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், பலியான ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அரசு, 107 மில்லியன் கனடா டாலர்கள் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஈரான் நாட்டிலிருந்து எவ்வாறு இந்த இழப்பீட்டுத் தொகை தொகையை பெற முடியும் என்பது தெரியவில்லை. இதனிடையே இந்த தீர்ப்பினால் ஈரான் மற்றும் கனடா நாடுகளுக்கிடையே மோதல் நிலை அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |