Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை மூலம் வங்கியில் இருந்து பணத்தை திருட முடியுமா…..? UIDAI-வின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையின் விவரத்தை வைத்து வங்கியில் இருந்து பணத்தை திருடுவதாக சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இதற்கு தற்போது UIDAI தன்னுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அதில் ஆதார் அட்டை நம்பரை மட்டும் வைத்துக் கொண்டு வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை திருட முடியாது என பதிவிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஆதார் அட்டை விவரங்களை பகிர்ந்து கொள்ள விரும்பாத நபர்கள் மாஸ்கட் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். இந்த ஆதார் அட்டையை UIDAI-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று தேவையானவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வங்கி கணக்கில் இருந்து ஆதார் அட்டை மூலம் பணத்தை திருட முடியாது என்றாலும், பொதுமக்கள்  மாஸ்கட் ஆதார் அட்டையை பயன்படுத்துவது தான் சிறந்தது என அரசாங்கம் கூறுகிறது.

Categories

Tech |