நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓசூரில் இருந்து தமிழக பேருந்துகள் கர்நாடகத்திற்கும் கர்நாடக பேருந்துகள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கும் இயங்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரனோ ஊரடங்கு காரணமாக தமிழக கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைக்கு இரு மாநிலங்களும் தடை விதித்திருந்தனர். தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து வெவ்வேறு வழித்தடங்கள் வழியாக 250 அரசு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை தமிழ்நாடு பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த மாநில எல்லை ஜூஜூவாடி வரையிலும் கர்நாடக மாநில பேருந்துகள் அத்திப்பள்ளி சுங்கசாவடி வரையிலும் மட்டுமே இயக்கப்பட்ட வந்த நிலையில் இரு மாநில அரசுகளின் அனுமதியால் ஓசூரில் இருந்து தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கர்நாடகத்திற்கும் கர்நாடக மாநில பேருந்துகள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கும் இயக்கப்பட்டு வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டு மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து சேவை தொடங்கியிருப்பதால் மாநில பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.