Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

2.30க்கு மேல் கோயம்பேட்டில் பேருந்துகள் இயங்காது …!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலுள்ள யாரும் அந்தந்த மாவட்டத்திற்கு நுழையக்கூடாது என்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலாகும் நிலையில் இருப்பதால் கோயம்பேட்டில் 2.30 மணியில் இருந்து பேருந்துக்குள் இயங்காது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்யாறு, பண்ருட்டி, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி பகுதிக்கு மட்டும் தற்போது பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |