Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட டிரைவர்…. படுகாயமடைந்த பயணிகள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கரூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மோகன்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கருக்காம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்னால் லாரி ஒன்று சென்றுள்ளது.

அப்போது லாரி ஓட்டுநரான மணி என்பவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பேருந்து லாரியின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |