Categories
கோயம்புத்தூர் சேலம் நீலகிரி மாவட்ட செய்திகள்

’4ஜி சேவை வழங்க வேண்டும்’ – பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்..!!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் மாதச் சம்பளம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, சேலம் சீரங்கபாளையத்திலுள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில், 4ஜி சேவையை வழங்க வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோல, கோயம்புத்தூரிலுள்ள பொள்ளாச்சியிலும், நீலகிரியிலுள்ள உதகையிலும் 4ஜி சேவையை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |