Categories
சினிமா தமிழ் சினிமா

சகோதரர்களின் செயல்… திருமணத்தில் கண்ணீர்விட்டு உதவி கேட்ட நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ..!!!

திருமணத்தில் கண்ணீர்விட்டு உதவி கேட்டு வரும் நாகினி சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாகினி சீரியல் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை மௌனி ராய் அவரது காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். முதலில் கேரள முறைப்படி நடந்த இவர்களது திருமண புகைபடங்கள் அதிகம் வெளியாகி வைரல் ஆனது. இதை தொடர்ந்து பெங்காலி முறைபடியும் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது.

அப்போது மௌனி ராய் ஒரு ஸ்டூலின் மீது அமர வைத்து அவரது சகோதரர்கள் தூக்கி வரும்போது அவர் வெற்றிலையை வைத்து தனது முகத்தை மறைத்துக் கொண்டு வருகிறார். ஆனால் அவர் அப்போது கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கண்ணீர் விட்டு உதவி கேட்டுக் கொண்டே வருகிறார். மௌனி ராயின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CZRZmo_IP2k/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Categories

Tech |