Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசிக்கு ஏற்பட்ட நிலை.. ரத்த கட்டிகளால் அவதி.. சோகத்தில் குடும்பத்தினர்..!!

பிரிட்டன் இளவரசி  Michael of Kent (76) அரிய வகை ரத்த கட்டிகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசி Michael of Kent, இந்த வருடத்தின் தொடக்கத்தில் அஸ்ட்ராஜனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதமாக தன் குடியிருப்பிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது இளவரசி தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் திடீரென்று உடல் நலம் பாதிப்படைந்த தால் உடனடியாக மருத்துவரை அணுகியுள்ளார்கள்.

தற்போது இளவரசியின் நிலை குடும்பத்தினரை கவலையடையச் செய்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் தான் இளவரசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, கென்சிங்டன் அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அதன் பின்பு தான் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |