Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மீன்பிடி படகு விடுவிப்பா..?” மறுக்கும் பிரான்ஸ்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் சுற்றுசூழல் செயலர் பிரான்ஸ் பறிமுதல் செய்த தங்கள் மீன்பிடி படகு  விடுவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.

பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலர் George Eustice, பிரான்ஸ் அரசு கடந்த புதன்கிழமை அன்று விடுத்த எச்சரிக்கையிலிருந்து பின்வாங்கிவிட்டது. அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், பிரான்ஸ் பறிமுதல் செய்த பிரிட்டன் மீன்பிடி படகை விடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், இதனை மறுத்துள்ள பிரான்ஸ், தற்போதும் அந்த படகு, பிரான்ஸில் இருக்கும் Normandy என்ற துறைமுகத்தில் தான் இருக்கிறது. 1,25,000 பவுண்டுகள் வழங்கினால் தான் படகை அனுப்புவோம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தப் படகு விடுவிக்கப்பட்டது என்று George Eustice, எதற்காக கூறினார்? என்று தெரியவில்லை.

Categories

Tech |