Categories
மாநில செய்திகள்

BREAKING: TANCET தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியீடு…. நாளை முதல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்..!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 36 ஆயிரத்து 710 பேர் தேர்வு எழுதினர்.இத்தேர்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலுள்ள இக்கல்விகளுக்கான படிப்புகளைக் கொண்ட எந்தக் கல்லூரிகளிலும் சேர முடியும்.

இதனையடுத்து இன்று TANCET தேர்வு முடிவுகள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில்சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |