Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ. 2,000… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 தருவது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையடுத்து முதல் தவணையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாள் அன்று ரூ.2000 வழங்க உள்ளதாகவும், இதற்காக ரூபாய் 4000 கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 13 வகை மளிகை பொருட்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

Categories

Tech |