டெல்லியில் சற்று நேரத்திற்கு முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள நங்கிலோய் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் நடுக்கத்தால் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. .
தற்போது ஒரு சில மணி நேரத்திற்கு முன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளதால் கட்டடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கை உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.