இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார்.
கடந்த பத்தாம் தேதி நாகையைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். எல்லை தாண்டி மீனை மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது, நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அந்த 9 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
ஏற்கனவே பலமுறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த போதும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். தொடர்ச்சியாக இந்த போக்கு நீடிக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை அங்கிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். அது மட்டும் இன்றி அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தர வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.