Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாட்டு மக்களிடம் நாளை பிரதமர் உரை …..!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 122 பேர் இந்தியர்கள், 25 பேர் வெளிநாட்டினர்கள் ஆவர்.

கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா குறித்து நாளை இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றார்.

Categories

Tech |