இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 19ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், விஷயங்களையும் அவர் நாட்டு மக்களுக்கு சொல்ல இருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 19ம் தேதி அவர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய நிலையில் இன்று மீண்டும் நாட்டு மனக்களுடன் உரையாற்ற இருக்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று இரவு நாட்டு மக்களுடன் மோடி உரையாற்றுகிறார். ஏற்கனவே முன்னெச்சரிக்கை விதிகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என்ற வருத்தத்தை பிரதமர் பகிர்ந்து இருந்த நிலையில் இன்றைய தினம் இரவு எட்டு மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறார். ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக பிரதமர் பேசுவது குறிப்பிடத்தக்கது.