கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை குற்றவாளியாக தீர்ப்பளித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை இரத்து செய்யக்கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதே போல கோகுல்ராஜ் தயார் சித்ரா மற்றும் சிபிஐடி தரப்பில் இந்த வழக்கில் சங்கர் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீட்டு மனுவுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேசன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தின்விசாரணை அறிக்கையை பார்க்கும் போது விசாரணையில், விசாரணை நடந்த காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார்.
ஆனால் அதற்கும் 164 வாக்குமூலத்தை வழங்கியதற்கும் இடையே ஏதோ நிகழ்ந்துள்ளது. கிழமை நீதிமன்றமும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல், சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது. மேல்முறையீடு நீதிமன்றம் துறவிகளைப் போல தவறுக்கு எதிராக சமநிலையை பேண இயலாது. நீதித்துறையில் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. இது கட்டாயம் தேவையானது எனவும், தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் தோன்றுகின்றது
என தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் போதுமான காவல்துறை பாதுகாப்பு சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது. சுவாதியின் பெற்றோருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். சுவாதி நீதிமன்றத்திற்கு வருவதற்கு உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.