விழுப்புரம் கண்டமங்கலத்தில் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு செருப்பு மாலை ஆனது அணிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டிருக்கிறது. திமுக எம்.பி ராசாவின் புகைப்படத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திய மர்ம நபர்கள், அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திமுக கட்சி கொடியால் அண்ணாவின் முகத்தை மூடிவிட்டு, செருப்பு மாலையுடன், ராசாவின் கைப்படத்தை சிலையின் கழுத்தில் தொங்க விட்டுள்ளனர். சிலையை சரி செய்த கண்டமங்கல போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.