Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : கொரானாவுக்கு தமிழகத்தில் முதல் பலி!

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோர்  எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்  இந்தியாவில் இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில் கொரானா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரானா பாதிப்புடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தமும் இருந்தது.  தமிழகத்தில் கொரானாவால் ஏற்பட்ட  முதல் உயிரிழப்பு ஆகும்.

Categories

Tech |