Categories
மாநில செய்திகள்

BREAKING: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. அடுத்த அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து கடந்த 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் கடந்த இரண்டு நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மழையால் திருவாரூர், தஞ்சை, திருச்சி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் மொத்தம் எட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |