7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று தமிழக முதலவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய துரைமுருகன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் , தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்கள்.
அதனடிப்படையில் 7 பேர் விடுதலை விவகாரத்தை பொறுத்தவரை ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் கத்துக் கொண்டு இருக்கின்றோம் என்று தமிழக முதலமைச்சர் சட்டசபையில் கருத்தை பதிவு செய்துள்ளார். 7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி என்ன செய்ய முடியுமோ அதை அரசின் அதிகாரத்துக்குட்பட்டு செய்து விட்டோம். ஆளுநரின் அதிகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று சிவி சண்முகம் தனது கருத்தை தெரிவித்தார்.