Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: 1,398 வாக்குகள் வித்தியாசத்தில்…. பிரபல கானா பாடகர் பாலா தோல்வி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் 72-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரபல பாடகர் கானா பாலா தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் சரவணன் 8,303 வாக்குகள் பெற்றிருந்த நிலையில் கானா பாலா 6,095 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Categories

Tech |