Categories
தேசிய செய்திகள்

BREAKING: வெடித்தது கலவரம்… விவசாயி மரணம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

டெல்லியில் தற்போது கலவரம் வெடித்துள்ளதால் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். அதனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியதால் கலவரம் வெடித்து பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போலீஸார் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். போலீஸாரின் தடுப்புகள் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுக்களை மீறி டெல்லி செங்கோட்டை கொடிக் கம்பத்தின் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |