Categories
மாநில செய்திகள்

BREAKING: “விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்காதீர்”…. சென்னை உயர்நீதிமன்றம் …!!!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தவிர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேனர் வைப்பதில் விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கமளித்தது. இதனை தொடர்ந்து முதல்வர் பதவியேற்றபோது கூட பேனர்கள் வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டதாக திமுக தரப்பில் வழக்கறிஞர்வாதிட்டார்.

இந்நிலையில் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க மாட்டார் எனக் கூறுவது மட்டும் போதாது. விதிகளை பின்பற்றாமல் எந்தப் பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது. ஆளுங்கட்சி மட்டுமின்றி அனைத்து கட்சிகளையும் குறிப்பிடுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

Categories

Tech |