சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மழை நீர் தேங்கியதால் இரண்டு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
அதிலும் ரங்கராஜபுரம் மற்றும் தி.நகர் மேடலி சுரங்க பாதைகளில் மழைநீர் முழுவதும் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியாக செல்லும் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.