Categories
மாநில செய்திகள்

BREAKING: ரெம்டெசிவிர் மருந்து பெற இணையதளம் தொடக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தில் கொரோனா நோயாளிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து, தனியார் மருத்துவமனையில் மருந்து பெறலாம். மருத்துவமனை விவரம், நோயாளியின் விவரம், தொற்று அறிகுறி மற்றும் இணை நோய் விவரங்களை கட்டாயம் பதிவிட வேண்டும்.

Categories

Tech |