Categories
மாநில செய்திகள்

Breaking: ரூ.1 லட்சம் பரிசு… ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு… நீங்க ரெடியா?…!!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளையை அடக்க முயலும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளன.

இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ம…

Categories

Tech |