Categories
மாநில செய்திகள்

BREAKING : ராணுவ அதிகாரிகளின் மரணம்…. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி…!!!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடலுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களின் உடல் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் சூலூரில் இருந்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களும் விமானப்படைக்கு சொந்தமான c-130j  சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அவரது உடல் டெல்லி பாலம் விமான தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Categories

Tech |