கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மேலும் 12 மீனவர்களை கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Categories
BREAKING : மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!
