Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.

மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற பகுதிகளில் ஏற்கனவே உள்ள பல்வேறு தளர்வுகள் அமலில் இருக்கும். தமிழகத்தில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |