தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடாக பால், மருந்து கடை தவிர பிற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் பூங்காக்கள் அனைத்தும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும். உணவு விடுதிகள், டீக்கடைகளில் மாலை 5 மணிக்கு மேல் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.