மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார்.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளார்கள். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதனை, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இவர் தமிழக காவல் துறையில் தமிழ் சுருக்கெழுத்து நிருபராக இருந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.