Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதல்வர் மீது கடும் தாக்குதல்… காலில் பலத்த காயம்…. பெரும் பரபரப்பு…!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் முக்கிய கட்சிகளை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு சென்றபோது மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் தள்ளிவிட்டதால் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |