Categories
மாநில செய்திகள்

BREAKING: மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விரித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் நேற்று கொரோனா பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்ட சென்னை, கோவை, காஞ்சிபுரம், நாகை மற்றும் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |