Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவி மரணம்…. ஆசிரியை தற்கொலை…. திடீர் பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்தக் கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்கணும் என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கை தனிக்குழு அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மாணவி படித்த பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள், மாணவர்கள் முன் அவமானமாக இருக்கிறது என்று சரவணன் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சரவணன் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |