தமிழகத்தில் சில காலமாகவே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் சில மாணவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே இது போன்று இனி மாணவர்களுக்கு நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.