தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் பார்வையிட்டு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
Categories
BREAKING: மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…!!!
