Categories
மதுரை மாநில செய்திகள்

BREAKING : மதுரையில் தட்டச்சு தேர்வில் ஆள்மாறாட்டப் புகார் …!!

மதுரையில் தட்ச்சு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்ற நிலையில் மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2019ஆம் ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக மரகதம் என்ற பெண் சிக்கியுள்ளார். ஒரு பெண்ணிற்காக விக்னேஷ் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதனடிப்படையில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் அருளரசு மதுரை ஜெயந்திபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயந்திபுரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்துள்ளார். ஆள்மாற்றட்டம் செய்ததாக விக்னேஷ் , மரகதம் , தட்டச்சு பள்ளி உரிமையாளர் நாதன் என ஆள்மாறாட்டம் செய்த 2 பேர் , உதவிய ஒருவர் என வழக்கு 3 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |