Categories
மாநில செய்திகள்

BREAKING: மக்களே வெளியே போகாதீங்க…. அடுத்த 12 மணி நேரத்தில்…. உச்சகட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. அது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |