சாத்தான்குளம் தந்தை, மரணம் தொடர்பாக பெண்காவலரிடம் மீண்டும் நீதித்துறை நடுவர் விசாரணை செய்து வருகின்றார்.
சாத்தன்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் சித்தரவதையால் மரணம் அடைந்த வழக்கை உய்ரநீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இந்த இருவரும் மரணம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 28ம் தேதி கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தி சென்றார். இந்த நிலையில் நேற்று மீண்டும் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினரிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு வந்து சம்பவத் தன்று பணிபுரிந்த பெண் காவலர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையை வீடியோவாக பதிவு செய்கிறார். காவல் நிலையத்திற்கு வந்த அவர் மற்ற காவலர்கள் அனைவரும் வெளியே வெளியே இருக்குமாறு சொல்லி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.