பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த அமைச்சரவை பட்டியலில் முன்னாள் அதிகாரிகள். மருத்துவர்கள், பொறியாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது . தற்போது பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நடைபெற்றுவருகின்றது. புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் பிரதமர் மோடி தலைமையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றுள்ளனர்.