தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ளதால் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
Categories
BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை….முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!
