Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: பள்ளியின் தாளாளர், செயலாளர், பிரின்சிபல் கைது – டிஜிபி….!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து  மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் ரவிகுமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபு சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |