வீரப்பன் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மாதையன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் கடந்த 1ம் தேதி முதல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் வீரப்பனுடன் கடைசி காலம் வரை கூடவே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதையனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Categories
BREAKING: நெஞ்சுவலியால் வீரப்பன் அண்ணன் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!
