Categories
சற்றுமுன் விளையாட்டு

BREAKING: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகல்…!!!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 25ம் தேதி கான்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரஹானே வழிநடத்துகிறார்.

இந்திய அணியின் பிரதான தொடக்க வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தப்போட்டியில் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் ஷிப்மன்ட் ஹில் ஆகியோர் போட்டியிடுவதாக இருந்தனர். ஆனால் தற்போது கேஎல் ராகுலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |