தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தற்போது தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு உள்ளதால் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது காரணமாக சென்னை,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.