குரூப் 4 முறைகேட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயக்குமார் விசாரணையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
குரூப் 4 தேர்வு முறைகேடு , குரூப் 2A தேர்வு முறைகேடு என இரண்டு முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்டு தலைமறைவாக இருந்த ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, நாளை ( இன்று ) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
இதையடுத்து TNPSC முறைகேடு வழக்கு நடைபெறும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு செல்ல சம்மதமா ? என நீதிபதி கேட்டதற்கு நான் தவறு செய்யவில்லை என்று சொன்ன ஜெயக்குமார் , கண்ணீர் விட்டு அழுதார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி கோரிய மனு மீது எழும்பூர் நீதிமன்றம் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கின்றது.