நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.
சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை, தாம்பரம் ஆகிய 2 மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு (பொதுப் பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (ஆண்/பெண்) போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு (பொது பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.