இலங்கையில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் எரி பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக இலங்கை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.